என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு"
சேலம்:
நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சேலம் மணக்காட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சீமான் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் சீமான் வெளியே வந்து நிருபர்களிடம் கூறியதாவது:-
நான், பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக ஆட்சியாளர்கள் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. என்னை கோர்ட்டு, ஜெயில் என்று அலைக்கழித்தால் மக்கள் போராட வரமாட்டார்கள் என நினைக்கிறார்கள். மக்களுக்கு பிடிக்கவில்லை எனில் 8 வழிச்சாலைக்கு நாங்களே பூட்டுபோட்டு விடுகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் பேசுகிறார். முதல்-அமைச்சர் பேசும்போது இன்னும் 10 ஆண்டுகளில் வாகனங்கள் அதிகமாகிவிடும். 8 வழிச்சாலை போட்டால் விபத்துக்கள் குறைந்து விடும் என்கிறார். அமைச்சரும், முதல்-அமைச்சரும் பேச்சிலே முரண்பாடுகள் உள்ளது. ஆகவே மக்களுக்கு பிடிக்காத 8 வழிச்சாலையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். seeman
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்